உள்ளூர் செய்திகள்

பனை மரத்திலிருந்து தவறி விழுந்து சிறுவன் காயம்

Published On 2023-03-26 08:54 GMT   |   Update On 2023-03-26 08:54 GMT
  • நுங்கு பறிக்க முயன்றபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அருகே பனை மரத்தில் ஏறி நுங்கு பறிக்க முயன்ற சிறுவன் தவறி விழுந்தார்.

நாட்றம்பள்ளி அடுத்த கள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் சுபாஷ் (வயது 10) இவர் நேற்று தனது வீட்டு அருகே உள்ள பனைமரத்தில் ஏறி நுங்கு பறிக்க மரத்தில் ஏறினார்.

அப்போது தவறி விழந்து மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News