- குடும்ப தகராறில் விரக்தி
- 8 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த ஏம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள் பிரியா(வயது 27). இவருக்கும் கல்லாங்குத்து கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் நேற்று முன்தினம் ஜெகதீஷ் பிரியாவை தாய் வீடான ஏம்பலம் கிராமத்தில் விட்டுவிட வந்தார்.
பிரியாவுடன் ஜெகதீஷ் தகராறு செய்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த பிரியா வீட்டின் உள்ளே சென்று புடவையில் தூக்கில் தொங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரியா இறந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சின்னசாமி தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.