உள்ளூர் செய்திகள்

பஸ் மோதி வங்கி ஊழியர் படுகாயம்

Published On 2023-11-26 06:38 GMT   |   Update On 2023-11-26 06:38 GMT
  • பைக்கில் சென்றபோது விபரீதம்
  • போலீஸ் விசாரணை

கண்ணமங்கலம்,

சந்தவாசல் அருகே உள்ள தேப்பனந்தல் சந்தைமேட்டை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் ஹரிஹரன் (வயது 23), கலசபாக்கம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபு ரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை ஹரிஹரன் மோட்டார் சைக் கிளில் தேப்பனந்தல் சந்தை மேடு பகுதியில் வந்து கொண் டிருந்தார்.

அப்போது எதிரே வந்த தனியார் பஸ் எதிர்பா ராத விதமாக மோதியதில் ஹரிஹரன் படுகாயமடைந் தார். அவரை அக்கம்பக்கத்தி னர் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு 108 ஆம்புலன் சில் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News