உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்

Published On 2023-11-30 07:40 GMT   |   Update On 2023-11-30 07:40 GMT
  • வருவாய்த்துறையினர் திடீர் சோதனை
  • 2 பேரிடம் விசாரணை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா, சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் வருவாய்த்துறையினர் திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் நேற்று திடீரென சோதனை செய்தனர்.

அப்போது பெரியார் சிலை அருகே ஒரு பெட்டிக் கடையிலும், கன்னி கோவில் தெருவில் மற்றொரு பெட்டிக் கடையிலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. 2 கடைகளை வருவாய்த்துறையினர் பூட்டி சீல்வைத்தனர்.

மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News