உள்ளூர் செய்திகள்

முத்துமாரி.

மாமனாரால் கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

Published On 2023-04-09 15:07 IST   |   Update On 2023-04-09 15:07:00 IST
  • தமிழரசன் ராணுவ வீரராக ஜம்மு காஷ்மீரில் வேலை பார்த்து வருகிறார்.
  • முத்துமாரியை இரும்பு கம்பியால் தங்கராஜ் சரமாரியாக தாக்கினார்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள இட்டேரியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது60), தொழிலாளி. இவரது மகன் தமிழரசன் ராணுவ வீரராக ஜம்மு காஷ்மீரில் வேலை பார்த்து வருகிறார்.இவருடைய மனைவி முத்துமாரி (28).

2-வது திருமணத்திற்கு முயற்சி

தங்கராஜின் மனைவி இறந்து விட்டதால் 2-வது திருமணத்திற்கு முயற்சி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தமிழரசன் விடுமுறையில் சொந்த ஊர் வந்தார். அவரிடம் வீட்டை தனது பெயரில் எழுதி கேட்டு தங்கராஜ் தகராறு செய்து வந்தார்.

மேலும் தமிழரசன், முத்துமாரி ஆகியோர் சேர்ந்து தங்கராஜ் 2-வது திருமணம் செய்யக்கூடாது என்று கண்டித்தனர். இதனால் அவர் ஆத்திரம் அடைந்தார்.

கொலை

நேற்று முன்தினம் தமிழரசன் கடைக்கு சென்ற நேரத்தில் தங்கராஜ் வீட்டுக்கு சென்று முத்து மாரியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் மண்டை உடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முத்துமாரி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து தப்பியோடிய தங்கராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகிறார்கள்.

உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்

இதற்கிடையே முத்துமாரி உடல் பிரேத பரிசோதனைக்காக ஐகிரவு ண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரண்ட அவரது உறவி னர்கள், தங்கராஜை போலீ சார் கைது செய்ய வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

அவர்களிடம் இன்ஸ்பெக்டர் தில்லை நாக ராஜன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து 2-வது நாளாக உடலை வாங்க மறுத்து முத்துமாரியின் உறவினர்கள் இன்றும் போ ராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.

Tags:    

Similar News