உள்ளூர் செய்திகள்

மத்திய அரசு பழி வாங்கும் போக்குடன் செயல்படுகிறது-அமைச்சர் முத்துசாமி பேட்டி

Published On 2023-07-18 14:50 IST   |   Update On 2023-07-18 14:50:00 IST
  • ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கண்ணம்பாளையத்தில் நடந்தது.
  • 4 ஆயிரம் பேருக்கு தையல் எந்திரம், இஸ்திரி பெட்டி, வேஷ்டி சேலைகள், பள்ளி குழந்தை–களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டது.

சூலூர்,

கோவை தி.மு.க தெற்கு மாவட்டம், கண்ணம்பாளையம் பேரூர் தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கண்ணம்பாளையத்தில் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமை தாங்கினார்.

வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 4 ஆயிரம் பேருக்கு தையல் எந்திரம், இஸ்திரி பெட்டி, வேஷ்டி சேலைகள், பள்ளி குழந்தை–களுக்கு புத்தகப்பைகள் ஆகியவற்றை வழங்கினார்.

அதன்பிறகு கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள நுழைவாயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க.வின் மீது அரசியல் ரீதியாக பெரிய தடை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசு அமலாக்கப்பிரிவு மூலம் சோதனைகளை நடத்தி வருகிறது.

இத்தகைய சோதனை–களில் இருந்து அமைச்சர் பொன்முடி கண்டிப்பாக வெளியே வருவார். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

அண்ணாமலையை கண்டு தி.மு.க அஞ்சுகிறது என்று நினைப்பது எல்லாம் தவறான ஒன்று. எதற்காகவும் தி.மு.க. அஞ்சாது. இது அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை. இது போன்ற ரெய்டுகள் மூலம் தி.மு.க.வை முடக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் நாராயணமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இருகூர் சந்திரன், சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு, சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மகாலிங்கம், கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம், கண்ணம்பாளையம் பேரூர் கழக செயலாளர் விசுவநாதன், கண்ணம்பா–ளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ரா–ஜகோபால், பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், சூலூர் ஒன்றிய குழு உறுப்பினர் பட்டணம் ரகு, ஊராட்சி தலைவர்கள் சாந்தி ராஜேந்திரன் (அப்பநாயக்கன்பட்டி), வேலுச்சாமி (கணியூர்), மனோன்மணி கோவிந்தராஜ் (அரசூர்), எஸ்.கே.டி.பழனிச்சாமி (செஞ்சேரிபுத்தூர்), சரவணன் (பதுவும்பள்ளி), சரிதா வீரமுத்து (ஜெ.கிருஷ்ணாபுரம்), சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய அவை தலைவர் ராஜேந்திரன், இலக்கிய அணி அமைப்பாளர் பட்டணம் செல்வகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News