உள்ளூர் செய்திகள்
- லாரியின் முன்பக்க டயர் வாலிபர் மீது ஏறி இறங்கியது.
- சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை சரவணம்பட்டி சத்தி ரோட்டில் வாலிபர் ஒருவர் நடந்து சென்றார். அங்குள்ள தனியார் வணிக வளாகம் அருகே சென்ற போது அவர் திடீரென சாலையின் நடுவே சென்று அந்த வழியாக சென்ற லாரி முன்பு விழுந்தார். இதில் லாரியின் முன்பக்க டயர் அவர் மீது ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் தலைநசுங்கி பலியானார். இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் பின்னர் தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை மீட்டு கோவை இஎஸ்ஐ ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.