உள்ளூர் செய்திகள்

திட்டக்குடியில் கஞ்சாவுடன் வாலிபர் கைது

Published On 2022-08-06 07:38 GMT   |   Update On 2022-08-06 07:38 GMT
  • திட்டக்குடியில் கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • விறகு கட்டைகளுக்கு அடியில் இருந்த கஞ்சா 10கிராம்,எடையுள்ள 25 பாக்கெட்டை போலீசார் கைப்பற்றினர்.

கடலூர்:

திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட வதிஷ்ட புரத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை வதிஷ்டபுரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த அரசன் மகன் ஆங்கி என்ற ராதாகிருஷ்ணன் (24)என்பவர் பிடித்து அவரது வீட்டில் சோதனை செய்த பொழுது வீட்டிற்கு பின்புறம் அடிக்கி வைக்கப்பட்டிருந்த விறகு கட்டைகளுக்கு அடியில் இருந்த கஞ்சா 10கிராம்,எடையுள்ள 25 பாக்கெட்டை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் யார் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News