உள்ளூர் செய்திகள்

கோவையில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

Published On 2023-08-29 14:35 IST   |   Update On 2023-08-29 14:36:00 IST
  • காயம் அடைந்த சைலேஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிக்கந்தர் பாட்சாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

கோவை,

கேரளம் மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சைலேஷ்குமார் (37). இவர் கோவைப்புதூரில் தங்கி கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறி 2 பேரும் காதலித்து வந்தனர்.

இதற்கிடையே இளம்பெண்ணை மதுக்கரையை சேர்ந்த சிக்கந்தர் பாட்சா (30) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

இது தொடர்பாக 2 பேருக்கும் தகராறு இருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று, சிக்கந்தர் பாட்ஷா, சைலேஷ் குமார் தங்கியிருந்த இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த சிக்கந்தர் பாட்ஷா, சைலேஷ்குமாரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயம் அடைந்த சைலேஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிக்கந்தர் பாட்சாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News