உள்ளூர் செய்திகள்
கல்பாக்கம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
- கல்பாக்கம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி வாலிபர் கர்ப்பமாக்கியுள்ளார்.
- புகாரின் பேரில் வாலிபரை கைது செய்த போலீசார் செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிராமத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த விக்ரம் (வயது 24) என்பவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறினார்.
இதனை நம்பி மாணவி நெருங்கி பழகினார். அப்போது ஆசை வார்த்தை கூறி விக்ரம் மாணவியிடம் பலமுறை உல்லாசமாக இருந்தார். இதில் தற்போது மாணவி 2 மாதம் கர்ப்பமானார். இது பற்றி அவர் பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் மாமல்லபுரம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய விக்ரமை கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.