உள்ளூர் செய்திகள்

இளம்பெண் கூட்டு பலாத்காரம்: ஆட்டோ டிரைவர்-நண்பர்கள் 2 பேர் கைது

Published On 2023-01-02 06:41 GMT   |   Update On 2023-01-02 06:41 GMT
  • திருவள்ளூரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரைச் சேர்ந்த சீயஞ்சேரி பகுதியைச்சேர்ந்தவர் விஜய் (18). ஆட்டோ டிரைவர். இவருக்கும் காக்களூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான 26 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

இந்த நிலையில் இளம்பெண்ணை விஜய் தனது ஆட்டோவில் அழைத்து வந்தார். பின்னர் அவர்கள் தனிமையில் இருந்தனர்.

அப்போது அங்கு விஜய்யின் நண்பர்களான சாம்ராஜ், சதீஷ் ஆகியோரும் அங்கு வந்து தங்களது ஆசைக்கு இணங்கும்படி இளம்பெண்ணை வற்புறுத்தினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோர் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பின்னர் இதுபற்றி வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

தனக்கு நேர்ந்த கொடுமையால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் புள்ளரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

திருவள்ளூரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News