உள்ளூர் செய்திகள்

சாத்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கழுத்தறுத்து கொலை

Published On 2023-05-30 06:14 GMT   |   Update On 2023-05-30 06:14 GMT
  • சில வாரங்களுக்கு முன்பு முத்துப்பாண்டி கேரளாவிற்கு வேலைக்கு சென்று விட்டார்.
  • கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான பரமசிவத்தை தேடி வருகின்றனர்.

சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது45). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (41). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ராஜேஸ்வரிக்கும், சங்கர நத்தத்தை சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி பரமசிவம் (50) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பரமசிவத்துடன் பேசுவதை ராஜேஸ்வரி தவிர்த்துள்ளார். மேலும் தன்னுடன் பழகுவதை கைவிடுமாறும் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.

சில வாரங்களுக்கு முன்பு முத்துப்பாண்டி கேரளாவிற்கு வேலைக்கு சென்று விட்டார். நேற்று இரவு ராஜேஸ்வரி வீட்டின் திண்ணையில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த பரமசிவம் தூங்கியிருந்த ராஜேஸ்வரியின் கழுத்தை அரிவாளால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பினார்.

இன்று அதிகாலை ஊர் திரும்பிய முத்துப்பாண்டி வீட்டின் திண்ணையில் மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், ஏழாயிரம் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான பரமசிவத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News