உள்ளூர் செய்திகள்
- மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
- போலீஸ் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் மணல் கடத்தியவர் ஆரணியை சேர்ந்த ராமராஜ் என்பது தெரிந்தது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று ஆரணி ஆற்றின் அருகே மங்களம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் மணல் கடத்தியவர் ஆரணி, புதிய தமிழ் காலனியைச் சேர்ந்த ராமராஜ் (வயது 31) என்பது தெரிந்தது.
போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.