உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் நடந்த மாபெரும் பிரசார பொது கூட்டம்- செல்வப்பெருந்தகை பங்கேற்பு

Published On 2024-04-08 08:47 GMT   |   Update On 2024-04-08 08:47 GMT
  • பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.
  • அமைச்சர் , விஜய் வசந்த், மேயர் மகேஷ், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்தியா கூட்டணி சார்பில் நாகர்கோவிலில் நடந்த மாபெரும் பிரசார பொது கூட்டத்தில், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். அப்போது அவர் பிரசாரத்தில் பேசியதாவது, மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தை விளக்கினார்.


அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த், மேயர் மகேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்ல பிரசாத், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் திரு ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் திருமதி தாரகை கத்பர்ட், இந்தியா கூட்டணி கட்சி மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News