கைது செய்யப்பட்ட ராம்ராஜ்.
வெளிநாட்டு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
- பெற்றோர் வெளியே சென்ற நிலையில் 2 பெண் குழந்தைகளிடமும் ராம்ராஜ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
- கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பேத்துப்பாறை அஞ்சுரான் மந்தையைச் சேர்ந்தவர் ராம்ராஜ் (வயது 53). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நெதர்லாந்தைச் சேர்ந்தவர் தனது மனைவி மற்றும் இரட்டை பெண் குழந்தைகளுடன் கொடைக்கானல் வந்தார்.
அதே பகுதியில் தங்கியதால் அவர்களுடன் ராமராஜ் சகஜமாக பேசியுள்ளார். பெற்றோர் வெளியே சென்ற நிலையில் 2 பெண் குழந்தைகளிடமும் ராம்ராஜ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகள் தனது தாயிடம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதால் ராம்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த 1 வாரமாக திருவிழாவின் போது மைக் செட் சத்தம் தங்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், உடனே நிறுத்தக்கோரியும் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக எந்த புகார் அளிப்பது என தெரியாமல் பாலியல் புகார் அளித்துள்ளதாக ராம்ராஜின் உறவினர்கள், நண்பர்கள் தெரிவித்தனர்.
கொடைக்கானலில் நீண்ட காலமாக வெளிநாட்டவர்கள் தங்கியுள்ளனர். அவர்களிடம் முறையான விசா உள்ளதா? என விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.