உள்ளூர் செய்திகள்

#Railway | ரெயில் என்ஜின் மீது அமர்ந்து அடம் பிடித்த வாலிபர்

Published On 2026-03-09 14:37 IST   |   Update On 2026-03-09 14:37:00 IST
  • மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.
  • ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மங்கள் குமார், (வயது 22). இவர் காட்பாடி பகுதியில் சுற்றித் திரிந்து வந்தார். இன்று காலை காட்பாடி ரெயில் நிலையத்தில் நடைமேடை 4-ல் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் செல்வதற்காக நின்று கொண்டிருந்தது.

அப்போது மங்கள் குமார் ரெயில் என்ஜின் மேற்கூரையில் திடீரென ஏறி அமர்ந்தார். என்ஜினில் மேல் உயர் அழுத்த மின்சார ஒயர்கள் சென்று கொண்டிருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். அவரை கீழே இறங்குமாறு பலமுறை தெரிவித்தனர். அவர் இறங்க மறுத்தார். உடனே இது பற்றி ரெயில்வே மின்சார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.

அதன் பிறகு போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பாதுகாப்பாக கீழே இறக்கினர். இதனால் காட்பாடி ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும் போது, மங்கள் குமார் தன்னிச்சையாக பேசிக் கொண்டு, யாருடைய கட்டுப்பாடுகளையும் ஏற்காமல் சுற்றித் திரிவதால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சந்தேகிக்கப்படுகிறது. அவரை சிகிச்சைக்காக மனநல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News