உள்ளூர் செய்திகள்
கொரோனா பரவலை தடுக்க திருவள்ளூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம்
- வணிக வளாகம் மற்றும் பொது இடங்களில் பெரும் பாலானோர் முக கவசம் அணியாமல் செல்கின்றனர்.
- 2052 பேருக்கு இலவசமாக முக கவசங்கள் வழங்கப்பட்டது
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட த்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வணிக வளாகம் மற்றும் பொது இடங்களில் பெரும் பாலானோர் முக கவசம் அணியாமல் செல்கின்றனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி நகராட்சி ஆணையர் ராஜ லட்சுமி தலைமையில் சுகாதார அலுவலர் கோவிந்த ராஜ், சுகாதார ஆய்வாளர் சுதர்சன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நகராட்சிக்குட்பட்ட ரெயில் நிலையம் முதல் டோல்கேட் வரை கடைகளில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கினார். மேலும் இலவசமாக முக கவசங்களை பொது மக்களுக்கு வழங்கினார்.
இந்த விழிப்புணர்வின் போது 2052 பேருக்கு இலவசமாக முக கவசங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.