உள்ளூர் செய்திகள்

பா.ஜனதாவுடன் கூட்டணி தொடரும்- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Published On 2023-03-15 09:23 GMT   |   Update On 2023-03-15 09:23 GMT
  • ஜனநாயக நாட்டில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாபெரும் இயக்கத்தை பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.
  • தமிழக காவல் துறையானது முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

கோபி:

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனநாயக நாட்டில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாபெரும் இயக்கத்தை பொறுப்பேற்று நடத்தி வருகிறார். அவருக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பை அரசு தவறி விட்டது. அதற்கு பதிலாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.

எதிர்க்கட்சியை நசுக்க வேண்டிய நிலை உருவாக்கியுள்ளது. இது அரசுக்கு அவப்பெயரை உருவாக்கும். தமிழக காவல் துறையானது முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால் அதை தவறவிட்டு அவர்மீது வழக்கு போடப்பட்டுள்ளது கண்டனத்துக்குரிய செயலாகும்.

இது போன்ற நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்வது இந்த அரசின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. கொள்கை வேறு, கூட்டணி வேறு. பா.ஜ.க. வுடன் கூட்டணி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News