உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு- கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி

Published On 2023-04-11 06:08 GMT   |   Update On 2023-04-11 06:08 GMT
  • மாஸ்க் அணிவது தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும்.
  • கொரோனா பரவலை தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சென்னை:

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

* தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 400-ஐ நெருங்கியுள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

* அண்டை மாநிலமான கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

* தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

* தமிழகம் முழுவதும் பொது இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும்.

* மாஸ்க் அணிவது தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும்.

* மருத்துவ குழு அமைத்து வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

* மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க வேண்டும்.

* கொரோனா பரவலை தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Tags:    

Similar News