உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

Published On 2023-05-28 10:02 GMT   |   Update On 2023-05-28 10:04 GMT
  • தடுப்பு வேலி இருப்பதை அறியாமல் வளைவில் திரும்பும் போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
  • விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த புதுப்பட்டு கூட்டுச்சாலையில் கடந்த 24-ந் தேதி இரவு காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் வாரச்சந்தையை முடித்துக் கொண்டு அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதிைய சேர்ந்த கூலி தொழிலாளிகள் 5 பெண்கள் உட்பட 7 பேர் ஒரே ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். புதுப்பட்டு அருகே வந்த போது தடுப்பு வேலி இருப்பதை அறியாமல் வளைவில் திரும்பும் போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிவகாமி, தேவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலத்த காயம் அடைந்த பூங்கொடி(50) அரசு ஆஸ் பத்திரியிலும் கஜலட்சுமி (55) சென்னை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பூங்கொடி, கஜலட்சுமி ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் கவலைக்கிடமான நிலையில் கலைவாணி, செல்வம், மனோகரன் உட்பட 4 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News