உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

Published On 2023-07-30 08:52 GMT   |   Update On 2023-07-30 08:52 GMT
  • வனத்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன.
  • ஜோசப் ஸ்டாலின் புலிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேட்டுப்பாளையம்,

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ந்தேதி சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்லார் புதூர் உண்டு,உறை விடப்பள்ளியில் வனத்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன.

மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். முன்னதாக ஜோசப் ஸ்டாலின் புலிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் வனவர் முனியாண்டி, பள்ளி நிர்வாகி ஷ்யாம் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News