உள்ளூர் செய்திகள்

சிறப்பு மருத்துவ முகாமை மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தொடங்கினார்.

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2022-12-28 09:58 GMT   |   Update On 2022-12-28 09:58 GMT
  • கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது.
  • முகாமில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

தஞ்சாவூர்,

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமினை கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்.

முகாமில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணிபாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் 225 நபர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் மீனாட்சி மருத்து வமனை மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவு, இ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.

மேல்சிகிச்சை தேவைபடு பவர்களை கண்டறிந்து பரிந்துரை செய்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

இம்முகாமில் பொது மேலாளர்கள் இளங்கோவன், முகமதுநாசர், முதுநிலை துணை மேலாளர் கோவிந்த ராஜன், துணை மேலாளர்கள் சிங்காரவேலு, ராஜேஷ், பணி மேலாளர் ஸ்ரீதர், உதவி மேலாளர் ராஜசேகர், மருத்துவர்கள் குருநாதன், சினேகா, செல்வராஜ் மற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News