சேரன்மகாதேவி அருகே மின்சாரம் பாய்ந்து சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் பலி
- ஷாஜகான் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார்.
- அலங்கார விளக்குகளை அப்புறப்படுத்தும் பணியில் ஷாஜகான் ஈடுபட்டார்.
நெல்லை:
சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடை சம்பந்தர் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 44 ). இவர் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார்.
மின்சாரம் தாக்கி பலி
நேற்று பத்தமடை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக அவர் ஒலிபெருக்கி மற்றும் அலங்கார விளக்குகள் பொருத்தி இருந்தார். விழா நிறைவையொட்டி இன்று காலை கோவிலில் அமைத்திருந்த அலங்கார விளக்குகளை அப்புற ப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இதில் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேரன்மகாதேவியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜகான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.