உள்ளூர் செய்திகள்
- திருப்பத்தூரில் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- முகாமில் 50-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நெற்குப்பை
உலக வெறி நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்புத்துறை சிவகங்கை மண்டலம் சார்பில் நாய்களுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.
முகாமில் திருப்பத்தூர் கால்நடை மருத்துவர் ராமச்சந்திரன் நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தினார். முகாமில் கால்நடை மருத்துவமனை முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் கருப்பையா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முருகானந்தம், அக்பர் அலி, முகமது யாசின் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 50-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.