உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-09-21 06:47 GMT   |   Update On 2022-09-21 06:47 GMT
  • காரைக்குடியில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
  • வீட்டிற்குள் முருங்கை மரம் விழுந்தது தொடர்பான பிரச்சினையில் செல்வி மகன் பாலாஜி மற்றும் சிலர் மகாலிங்கத்தை தாக்கினார்களாம்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் அசோக் நகர் பகுதியில் வசிப்பவர் மகாலிங்கம் (வயது 55). இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வி (42) என்பவருக்கும் வீட்டிற்குள் முருங்கை மரம் விழுந்தது தொடர்பான பிரச்சினையில் செல்வி மகன் பாலாஜி மற்றும் சிலர் மகாலிங்கத்தை தாக்கினார்களாம். இதுகுறித்து கடந்த 11-ந் தேதி வடக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் செல்வி, பாலாஜி மற்றும் சிலர் மீது வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டபிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் வழக்கில் தொடர்பில்லாத பொறியியல் கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் (20) மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து கைது செய்ததை எதிர்த்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தை 

Tags:    

Similar News