உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

Published On 2022-10-23 08:35 GMT   |   Update On 2022-10-23 08:35 GMT
  • நெற்குப்பையில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
  • அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் இலவச சைக்கிள்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் இலவச சைக்கிள்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார். இதில் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார்,பேரூராட்சி சேர்மன் அ.புசலான், துணைச் சேர்மன் கே.பி.எஸ். பழனியப்பன், செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News