உள்ளூர் செய்திகள்
கனமழை எதிரொலி - புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- தொடர் கனமழையால் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து நாளை அரசு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழையால் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.