உள்ளூர் செய்திகள்

வாழப்பாடியில் துவாரகமாயி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2023-09-12 14:56 IST   |   Update On 2023-09-12 14:56:00 IST
  • மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில், இயற்கையான சூழலில், தியான மண்டபத்துடன் கூடிய சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது.
  • ஆகம விதிப்படி துவாரகமாயி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. துவாரகமாயி சிலை கும்பா பிஷேக விழா நடைபெற்றது.

வாழப்பாடி:

வாழப்பாடி அருகே மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில், இயற்கையான சூழலில், தியான மண்டபத்துடன் கூடிய சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் ஆகம விதிப்படி துவாரகமாயி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. துவாரகமாயி சிலை கும்பா பிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை யொட்டி கணபதி ஹோமம், யாக கால சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் சீரடி சாய்பாபா, துவாரகமாயி சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பல்வேறு பகுதியை சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள், பொது மக்கள் ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கப் பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, சாய்பாபா கோயில் அறக்கட்டளை நிர்வா கிகள் ஜவஹர், மாதேஸ்வரி, அரசவர்மன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News