- இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சேலம் புதிய பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிறுத்தும் இடத்தில் சோதனை நடத்தினர்.
- 32 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சேலம் புதிய பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிறுத்தும் இடத்தில் சோதனை நடத்தினர்.
அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 3 பேரின் பைகளை சோதனை செய்தனர். அதில் 32 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
இதில் கஞ்சா கடத்தி வந்தது மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மூர்த்தி (32), லிங்கேஷ் (28), சந்தானம் (30) என்பது தெரியவந்தது. இவர்கள் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ரெயில் மூலம் வேலூருக்கு கஞ்சா கடத்தி வந்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து சேலம் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்தி செல்ல இருந்தபோது போலீசில் சிக்கியதும் தெரியவந்துள்ளது. போலீசார் 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.