உள்ளூர் செய்திகள்
கோவையில் காய்கறி வியாபாரி வீட்டில் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை
- சம்பவத்தன்று தனலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு வியாபாரம் செய்ய சென்றார்.
- தனலட்சுமி நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 65) காய்கறி வியாபாரி.
சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வியாபாரம் செய்ய சென்றார். அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய தனலட்சுமி பீரோவில் இருந்த பணம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காய்கறி வியாபாரி வீட்டின் முன்பக்க கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.