உள்ளூர் செய்திகள்

கூடலூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி- போலீசார் துப்பாக்கி சூடு

Published On 2023-05-26 02:05 GMT   |   Update On 2023-05-26 02:27 GMT
  • கொள்ளையர்கள் காவலர்களை கத்தியால் வெட்டியதால் போலீசார் சுட்டு பிடித்தனர்.
  • பாதுகாப்புக்காக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி :

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க முயன்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். கொள்ளையர்கள் காவலர்களை கத்தியால் வெட்டியதால் போலீசார் சுட்டு பிடித்தனர்.

சுடப்பட்ட கொள்ளையன் சாம்பார் மணிக்கு தொடையில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தப்பிச்சென்ற மற்றொரு கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

அதிகாலை நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News