உள்ளூர் செய்திகள்

ரிஷிவந்தியம்: அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா

Published On 2022-07-04 08:30 GMT   |   Update On 2022-07-04 08:30 GMT
  • ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நடைபெற இருக்கிறது.
  • இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ரிஷிவந்தியம் அருகே ரிஷிவந்தியத்தில் பிரசித்திபெற்ற முத்தாம் பிகை சமேத அர்த்த நாரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இக்கோவி லில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவம் 11 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக் கான பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. முத்தாம்பிகை சமேத அர்த்த நாரீஸ்வரருக்கும், கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்துக்கும் சிறப்பு பூஜை செய்து, பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டம் விழாவை யொட்டி தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடைபெற உள்ளது. விழா வின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ரிஷிவந்தியம் பகுதி பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News