உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் அருகே கிராம சபை கூட்டம்
- பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த கைனூர் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஊராட்சி பஞ்சாயத்து துணைத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் கமலக்கண்ணன், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, கீதா, புவனேஸ்வரி, மீனாட்சி, சங்கர் கணபதி, புருஷோத்தனி, விமலா, துரைசாமி முன்னாள் துணை தலைவர் ரமேஷ் உள்பட150- க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் கலந்து கொண்டனர்.