உள்ளூர் செய்திகள்

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2023-06-21 08:13 GMT   |   Update On 2023-06-21 08:13 GMT
  • வழிப்பறியில் ஈடுபட்டதால் நடவடிக்கை
  • போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சென்னையை சேர்ந்த சூர்யா (வயது 25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் கலெக்டர் வளர்மதி, சூர்யாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News