உள்ளூர் செய்திகள்
பாம்பன்ரெயில் நிலையத்தில் தொழிலாளி அடித்துக்கொலை
- பாம்பன்ரெயில் நிலையத்தில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
- பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமேசுவரம்
ராமேசுவரம் பாம்பன் ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அதை பார்த்த பொதுமக்கள், அதுபற்றி பாம்பன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் அங்கு வந்த போலீசார், அடை யாளம் தெரியாமல் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை யாரோ மர்மநபர்கள் அடித்துக்கெலை செ்யதிருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் பார்ப்பதற்கு தொழிலாளி போன்று இருக்கிறார். அவரை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.