உள்ளூர் செய்திகள்

பாபா மெட்ரிக் பள்ளியில் சந்திரயான் கொண்டாட்டம்

Published On 2023-08-26 09:09 GMT   |   Update On 2023-08-26 09:09 GMT
  • மானாமதுரையில் பாபா மெட்ரிக் பள்ளியில் சந்திரயான் கொண்டாடப்பட்டது.
  • விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியை பாண்டியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

மானாமதுரை

இந்தியா சார்பில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் நர்சரி ப்ரைமரி பள்ளியில் மாணவர்களுக்கு சந்திரயான் 3 பயன்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அதை தயாரித்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

விழாவிற்கு நிறுவனர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் கபிலன் மற்றும் நிர்வாகி மீனாட்சி முன்னிலை வகித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியை பாண்டியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News