உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பிரசாரம்

Published On 2023-04-27 08:32 GMT   |   Update On 2023-04-27 08:32 GMT
  • விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
  • துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

பசும்பொன்

கமுதி அருகே பெருநாழியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்பான வாகன விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. நேதாஜி பஜாரில் தொடங்கிய பிரசாரத்தை காடமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவரும், தி.மு.க. மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளருமான பெருநாழி போஸ் தொடங்கி வைத்தார்.

ஊராட்சி மன்றத்தலைவர் ஆத்திமுத்து, இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப் பாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமையாசிரியை மாரஎலிசெபத் மகாராணி, ஆசிரியர் பயிற்றுநர் கந்தசாமி மற்றும் ஆசிரியர்கள்கருணாகரன்,கணேசமூர்த்தி,இல்லம் தேடிக் கல்வி தன்னார் வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரசாரத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் படிப்பதால் கிடைக்கும் இலவச திட்டங்கள் மற்றும் நன்மைகள் குறித்து பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியும், இது குறித்த துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News