உள்ளூர் செய்திகள்

நீர், மோர் பந்தல் நடத்தி வரும் காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு

Published On 2023-06-12 07:42 GMT   |   Update On 2023-06-12 07:42 GMT
  • ஆர்.எஸ்.மங்கலத்தில் நீர், மோர் பந்தல் நடத்தி வரும் காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு குவிந்தன.
  • ஆர்.எஸ். மங்கலத் தில் சனிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுகிறது வழக்கம்.

ஆர்.எஸ்.மங்கலம்

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆர்.எஸ். மங்கலத் தில் சனிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுகிறது வழக்கம். இங்கு நடைபெறும் வார சந்தைக்கு ஆர்.எஸ்.மங் கலத்தை சுற்றியுள்ள கிராமத்திலிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் சந்தையில் தங்களது வீட்டில் உள்ள நெல், மிளகாய், நவதானிய பொருட்களை விற்று விட்டு அதில் வரும் பணத்தைக் கொண்டு வீட்டுக்கு தேவை யான சாமான்களை வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு தற்போது கோடை காலத்தில் வழக்கத்துக்கு மாறாக கடுமை யான வெயில் சுட்டெரிப்ப தால் சந்தைக்கு வரும் பொதுமக்களின் தாகத்தை போக்கும் வகை யில் நீண்ட விடுமுறையில் சென்று வந்த ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையம் இன்ஸ் பெக்டர் பாஸ்கரன் முயற்சியால் அவர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்தன் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் இணைந்து சந்தை அருகே சனிக்கிழமை தோறும் நீர், மோர்பந்தல் நடத்தி வருவது குறிப் பிடத்தக்கது.

காவல் துறையினரின் இச்செயலை கண்டு சமூக ஆர்வலர்களும், தன்னார்வ தொண்டர்களும், பொதுமக்களும் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News