உள்ளூர் செய்திகள்

சுவாமிக்கு ஊஞ்சல் சேவை நடந்த காட்சி.

உடன்குடி அருகே பத்ரகாளி அம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா

Published On 2023-09-28 14:21 IST   |   Update On 2023-09-28 14:21:00 IST
  • திருவிழாவையொட்டி நேற்று இரவு அலங்கார பூஜை, அம்பாள் ஊஞ்சல் சேவை, சுவாமி சப்பர பவனி ஆகியன நடந்தது.
  • சிறப்பு நிகழ்ச்சிகளாக வில்லிசை, திருவிளக்கு பூஜை, பட்டிமன்றம், தினசரி அன்னதானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

உடன்குடி:

உடன்குடி கொட்டங்காடு தேவி பத்ரகாளி அம்மன் கோவில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு அலங்கார பூஜை, அம்பாள் ஊஞ்சல் சேவை, சுவாமி சப்பர பவனி ஆகியன நடந்தது.

வருகிற 30-ந்தேதி 11-ம் திருவிழாவில் கொடியிறக்க சிறப்பு பூஜையும், மறுநாள் காலை 8 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

சிறப்பு நிகழ்ச்சிகளாக வில்லிசை, திருவிளக்கு பூஜை, பட்டிமன்றம், தினசரி அன்னதானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் சுந்தர ஈசன் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News