உள்ளூர் செய்திகள்
பெண்ணை அரிவாளால் வெட்டியவர் கைது
- பெண்ணை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
- குடும்பதகராறு ஏற்பட்டபோது சம்பவம்
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் நிம்புனேஸ்வரம் கருப்பையா (வயது 55). கூலி தொழிலாளி. மனைவி மாணிக்கம். கணவன்-மனைவி டையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து சமரசம் செய்து வைப்பது வழக்கம். இந்நிலையில் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மாரிமுத்து மனைவி பெரிய நாயகி (50). கருப்பையாவை தட்டி கேட்டு விளக்கிவிட சென்றதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கருப்பையா வீட்டில் இருந்த அரிவாளால் பெரியநாயகியின் கழுத்தில் சரமாரிாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.