உள்ளூர் செய்திகள்

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-01 12:34 IST   |   Update On 2022-10-01 12:34:00 IST
  • எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • 12 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி நடந்தது

புதுக்கோட்டை:

எல்.ஐ.சி. முகவர்கள், பாலிசிக்கான போனசை உர்த்தி வழங்க வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவ காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். முகவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி அறந்தாங்கியில் கோட்டத் தலைவர் செல்வகணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிளைத் தலைவர் முகமது அலி ஜின்னா, செயலாளர் செல்லையா, சுப்பிரமணியன், கிளை முன்னணி முகவர்கள் சாத்தையா, அஜய்குமார்கோஸ், செந்தில்குமார், ரவிக்குமார், பழனிச்செல்வம், முருகன், தெட்சிணாமூர்த்தி, ஞானசேகரன், பெண் முகவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News