உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை அருகே ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணம்

Published On 2022-09-11 08:21 GMT   |   Update On 2022-09-11 08:21 GMT
  • புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் நேற்று இரவு பிணமாக கிடந்தார்.
  • பிணமாக கிடந்தவர் கொசளக்குடியை சேர்ந்த காசிராஜன் (வயது 31) என தெரியவந்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் நேற்று இரவு பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் பிணமாக கிடந்தவர் கொசளக்குடியை சேர்ந்த காசிராஜன் (வயது 31) என தெரியவந்தது. அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்துக்கொண்டாரா? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News