உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க கோரிக்கை மனு

Published On 2022-06-25 04:56 GMT   |   Update On 2022-06-25 04:56 GMT
  • தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 2 மாதங்களுக்கு மேலாக வேலை வழங்காமல் உள்ளனர்.
  • மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வருவாய் இழந்து பரிதவித்து வருகின்றனர்.

உடுமலை :

உடுமலை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

கடத்தூர் ஊராட்சியில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 2 மாதங்களுக்கு மேலாக வேலை வழங்காமல் உள்ளனர். இதனால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வருவாய் இழந்து பரிதவித்து வருகின்றனர். சில இடங்களில் மாற்றுத்திறனாளிகளின் ஊதியத்தில், கட்டாய வசூலிலும் ஈடுபடுகின்றனர்.

இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். சங்கத்தின் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் மாலினி, நிர்வாகிகள் குருசாமி, அழகிரிசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News