உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கிய காட்சி.

தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2023-05-16 14:05 IST   |   Update On 2023-05-16 14:05:00 IST
  • கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு பாதுகாவலர் நியமன சான்றிதழை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
  • பட்டாமாறுதல் உள்பட மொத்தம் 303 மனுக்கள் கூட்டத்தில் பெறப்பட்டது.

தென்காசி:

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நல துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1 மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவி, தேசிய உள்ளூர் குழு (எல்.சி) வாயிலாக 1 மாற்றுத்திறனாளிக்கு பாதுகாவலர் நியமன சான்றிதழையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நல துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு மாற்றுத் திறனாளிக்கு காதொலி கருவி ரூ. 8,500 மதிப்பில் உதவி உபகரணம் மற்றும் தேசிய உள்ளுர் குழு (எல்.எல்.சி.) வாயிலாக ஒருவருக்கு பாதுகாவலர் நியமன சான்றுகளையும் வழங்கினார்.

மேலும் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டாமாறுதல் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 303 மனுக்கள் பெறப்பட்டது.

கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந் தப்பட்ட அனைத்துத்துறை அலுவ லர்களுக்கும் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், வட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர நாராயணன், உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News