உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சி அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் பலி
- மொபட் ராமபட்டிணம் பிரிவு அருகே சென்ற போது முருகன் மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
- பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அகே உள்ள டி. நல்லி கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 40). பெயிண்டர்.
சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் பெயிண்டிங் வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டார்.
மொபட் ராமபட்டிணம் பிரிவு அருகே சென்ற போது முருகன் மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முருகன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.