உள்ளூர் செய்திகள்
திட்டக்குடி தாலுகா அலுவலகம் எதிரே நிழற்குடையில் பிணமாக கிடந்த முதியவர்
திட்டக்குடி தாலுகா அலுவலகம் எதிரே நிழற்குடையில் முதியவர் பிணமாக கிடந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள பஸ் நிழல் குடையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் இதுகுறித்து பொதுமக்களிடம் விசாரணை செய்தபோது இவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை.
இதனையடுத்து உடலை கைப்பற்றி போலீசார் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவர் குறித்து விவரம் தெரிந்தால் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொள்ளவும் அவர் கட்டம் போட்ட சட்டை, கட்டம் போட்ட கைலி, முகத்தில் அதிக அளவு தாடியுடன் உள்ளார்.