உள்ளூர் செய்திகள்

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவன் தற்கொலை - சிபிசிஐடிக்கு மாற்றம்

Published On 2022-09-15 17:54 GMT   |   Update On 2022-09-15 17:54 GMT
  • சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • இறுதி ஆண்டு தேர்வில் 4 பேப்பர்களில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் அந்த மாணவர் இருந்தார்.

சென்னை:

சென்னை ஐ.ஐ.டி.யில் 4-ம் ஆண்டு ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவர் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இறுதி ஆண்டு தேர்வில் 4 பேப்பர்களில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் இருந்த அவர், ஸ்கிப்பிங் கயிறு மூலம் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ஐஐடியில் ஒடிசா மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

கல்வி நிலைய வளாகங்களில் நடைபெறும் தற்கொலைகளை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News