உள்ளூர் செய்திகள்

 கைதான முதியவர் ஜோதி

பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவர் போக்சோவில் கைது

Published On 2022-06-27 08:45 GMT   |   Update On 2022-06-27 08:45 GMT
  • பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
  • சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சிறுமியின் தாயார் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் ஓடிச்சென்று பார்த்தனர்.

கடலூர்:

பண்ருட்டி அருகே வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 62). இவர் அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று கையைப்பிடித்து இழுத்து சென்று வீட்டினுள் தாழ்ப்பாள் போட்டு கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சிறுமியின் தாயார்மற்றும் அவரது மாமியார் ஆகியோர் ஓடிச்சென்று பார்த்தபோது ஜோதியின் வீட்டிலிருந்து பாதிக்கப்பட்ட சிறுமி அழுது கொண்டே வெளியே வந்ததாகவும் இதைப்பற்றி கேட்டபோது அசிங்கமாகதிட்டிவிட்டு ஜோதி அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோவில் வழக்கு பதிந்து முதியவர் ஜோதியை கைது செய்தனர். கைதான அவர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 

Tags:    

Similar News