உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்த வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்

Published On 2022-06-25 08:42 GMT   |   Update On 2022-06-25 08:42 GMT
  • பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்த வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
  • இருவரும் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசுஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

கடலூர்:

பண்ருட்டி அருகே கீழிருப்புகிழக்குதெருவை சேர்ந்தவர் ஏழுமலை. அவரது மனைவி பானுமதி (வயது 40). இவர்களது மகன் அஜித்குமார்  இவர் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகள் அனுசுயா என்பவரை ஒருமாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டில்இருந்தனர். நேற்றுமுன்தினம் பானுமதி வீட்டுவாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த அதேஊரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, ரவி,பரத்,ஸ்ரீராம்ஆகியோர் பானுமதியை பார்த்து எங்க வீட்டு பெண்ணை காதலித்து திருமணம் கொ செய்யலாம் என்று கூறி உருட்டுகட்டையால் தாக்கினர்.

இதில் பானுமதி, அவரது மகன் அஜித்குமார்ஆகியோர்காயமடைந்தனர். இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசுஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து காடாம்புலியூர் போலீஸில் புகார் செய்தனர்.காடாம்புலியூர்போலீஸ்இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர்பூவராகவன் ஆகியோர்வழக்குப்பதிவு செய்து 5பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News