உள்ளூர் செய்திகள்

பிரதம மந்திரி கிசான் திட்ட பயனாளிகள் ஆதார் எண் பதிவு செய்ய சிறப்பு முகாம்

Published On 2023-06-02 05:09 GMT   |   Update On 2023-06-02 05:09 GMT
  • பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா மூலம் ரூ.2 ஆயிரம் நிதி மத்திய அரசு வழிகாட்டுதலின் படி ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • தற்பொழுது மத்திய அரசு 14-வது தவணைத் விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள் ளது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பர மத்திவேலூர் தாலுகா, பர மத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்த சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா மூலம் ரூ.2 ஆயிரம் நிதி மத்திய அரசு வழிகாட்டுதலின் படி ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்பொழுது மத்திய அரசு 14-வது தவணைத் விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள் ளது. அதன்படி ஜூலை மாதம் முதல் விடு விக்கப்படும் அனைத்து தவணைத் தொகைகளும் பயனாளி களின் ஆதார் எண் அடிப்ப டையில் மட்டுமே விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

எனவே அனைத்து பிரதம மந்திரி கிசான் திட்ட பயனாளிகளுக்கும் வேலூர் அஞ்சல் அலுவல கத்திலும், பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவல கத்தி லும் வரும் திங்கட்கி ழமை அன்று ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஆதார் எண்ணுடன் இணை த்தல், சேமிப்பு கணக்கு தொடங்கு தல் மற்றும் ஆதார் கார்டில் முகவரி மாற்றம், கைபேசி எண் இணைத்தல் போன்ற அனைத்து பணிகளையும் செய்து தர உள்ளார்கள்.

எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆதார் எண்ணை பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News